- வீடு›
- பொழுதுபோக்கு›
- பெண் சிங்கம் எழுந்திருக்கும் நேரம் இது - நடிகை வனிதா
பெண் சிங்கம் எழுந்திருக்கும் நேரம் இது - நடிகை வனிதா
By: Monisha Fri, 24 July 2020 10:36:34 AM
நடிகை வனிதா தற்போது மூன்றாவதாக, ஏற்கனவே மனைவி, குழந்தையுடன் இருக்கும் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மனைவியை விவாகரத்து செய்யாதவரை நடிகை வனிதா திருமணம் செய்தது சினிமா வட்டாரத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை வனிதாவின் செயலை நடிகைகளான லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, குட்டி பத்மினி, தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் கண்டித்தனர். அவர்களிடம் "எனது சொந்த வாழ்க்கையில் தலையிட உங்களுக்கு உரிமை இல்லை" என்று சமூக வலைதளத்தில் வனிதா கட்டமாக பதிலடி கொடுத்தார். ஆனாலும் மோதல் ஓயவில்லை. லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி ஆகியோர் வனிதாவுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
இந்நிலையில் மீண்டும் இந்த விவகாரம் பற்றி லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாவது:- "முதல் மனைவியை விவாகரத்து செய்யாதவரை படித்த வனிதா மணக்கலாமா என்று ஒரு பதிவை நான் வெளியிட்டது தவறா. கணவர்களின் இதுபோன்ற தவறுகளால் பல பெண்கள் நடுரோட்டில் நிற்பதையும் குழந்தைகள் கஷ்டப்படுவதையும் நான் பார்த்துள்ளதால் அதே கொடுமை இன்னொரு பெண்ணுக்கு நடக்க கூடாது என்ற அக்கறையில் பதிவிட்டேன். நாங்கள் செய்யப்போவதை செயலில் காட்டுவோம்” என்றார்.
இந்த நிலையில் டுவிட்டரில் இருந்து வெளியேறிய வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "கடவுளின் ஒவ்வொரு மகள்களுக்குள்ளும் ஒரு பெண் சிங்கம் இருக்கிறது. அது எழுந்திருக்கும் நேரம் இது, சட்டம் தன் கடமையை செய்ய வைப்போம்" என்று பதிவிட்டு சிங்கம் படத்தையும் வெளியிட்டுள்ளர்.