Advertisement

ஜித்தன் ரமேஷ் - நிஷாவை சந்தித்து பேசிய அர்ச்சனா

By: Nagaraj Thu, 24 Dec 2020 8:50:06 PM

ஜித்தன் ரமேஷ் - நிஷாவை சந்தித்து பேசிய அர்ச்சனா

மூழ்காத ஷிப்பே பிரண்ட் ஷிப்தான் என்று பதிவிட்டு கலக்கி உள்ளார் தொகுப்பாளர் அர்ச்சனா.

கடந்த 20 வருடங்களாகவே பல்வேறு தொலைக்காட்சிகளில் அர்ச்சனா தொகுப்பாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்த நிலையில் தான் பிக்பாஸ் நிகழ்சியில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தற்போது நடைபெற்று வருகின்ற சீசன் 4 நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.

அர்ச்சனா எப்போதும் அன்புதான் எனது ஆயுதம் என்று கூறி வருவார். அவருக்கென நிஷா, ரியோ, ரமேஷ், கேப்ரியல்லா, சோம் சேகர் என்று தனி க்ரூப் ஒன்றை உருவாக்கிக்கொண்டு அனிதா, பாலா மற்றும் ஆரி ஆகிய சிலர் மீது வெறுப்பு காட்டி வந்தனர்.

archana,instagram,posted by,jithan ramesh,nisha ,அர்ச்சனா, இன்ஸ்டாகிராம், பதிவிட்டு, ஜித்தன் ரமேஷ், நிஷா

இதனால், நெட்டிசன்களின் கோபத்திற்கு ஆளாகி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். அவரை அவரது வீட்டினர் உற்சாகமாக வரவேற்கும் வீடியோவும் வெளியானது.

இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்ட ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷாவை சந்தித்து அவர்களுடன் உரையாடி உள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து 'மூழ்காத ஷிப்பே பிரண்ட்ஷிப்தான்' என்று அர்ச்சனா பதிவிட்டு இருக்கின்றார்.

Tags :