Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • சூர்யாவின் பாராட்டால் இன்ப அதிர்ச்சி அடைந்த க/பெ ரணசிங்கம் படக்குழுவினர்!

சூர்யாவின் பாராட்டால் இன்ப அதிர்ச்சி அடைந்த க/பெ ரணசிங்கம் படக்குழுவினர்!

By: Monisha Mon, 05 Oct 2020 11:40:30 AM

சூர்யாவின் பாராட்டால் இன்ப அதிர்ச்சி அடைந்த க/பெ ரணசிங்கம் படக்குழுவினர்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான 'க/பெ ரணசிங்கம்' என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது. ஓடிடியில் சமீபகாலமாக வெளிவந்த திரைப்படங்கள் மக்களின் ஆதரவை பெறாத நிலையில் முதல்முறையாக ஓடிடியில் வெளியாகி வெற்றி பெற்ற படம் என்ற பெருமை இந்த படத்திற்கு உண்டு.

இந்த படத்தை விஜய் சேதுபதி ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரமுகர்களும் பார்த்து பாராட்டி வருகின்றனர். இது வரை வெளிவந்த கிராமத்து கதைகளில் மிகவும் வித்தியாசமான கதை என்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு தேசிய விருது பெறும் அளவிற்கு சூப்பராக இருந்தது என்றும் திரையுலக பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

surya,vijay sethupathi,aishwarya rajesh,ka pe ranasingam,crew ,சூர்யா,விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ்,க பெ ரணசிங்கம்,படக்குழுவினர்

இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டும் படக்குழுவினருக்கு தனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியதாவது:-

அடித்தட்டு மக்களின் இயலாமையை, வறுமையை, வெளிநாடு போய் படும் நெருக்கடியை, நெஞ்சைத் தட்டி நியாயம் கேட்கிற படம் 'க/பெ ரணசிங்கம்'. இயக்குனர் விருமாண்டி, விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜிப்ரான், மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள் என்று கூறியுள்ளார். சூர்யாவின் பாராட்டால் படக்குழுவினர் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :
|