Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஒரு செகண்டில் ஓராயிரம் மேஜிக் பண்ணக்கூடிய ஒரு அசாத்திய பாடகர்; எஸ்பிபியின் மறைவு குறித்து கலைப்புலி எஸ் தாணு

ஒரு செகண்டில் ஓராயிரம் மேஜிக் பண்ணக்கூடிய ஒரு அசாத்திய பாடகர்; எஸ்பிபியின் மறைவு குறித்து கலைப்புலி எஸ் தாணு

By: Monisha Sat, 26 Sept 2020 11:16:51 AM

ஒரு செகண்டில் ஓராயிரம் மேஜிக் பண்ணக்கூடிய ஒரு அசாத்திய பாடகர்; எஸ்பிபியின் மறைவு குறித்து கலைப்புலி எஸ் தாணு

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று மதியம் 1:04 மணிக்கு காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள், எஸ்பிபியின் மறைவு குறித்து வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

குழல் இனிதா? யாழ் இனிதா? என்று கூறினால் அதற்கு எஸ்பிபி அவர்களின் குரல் தான் இனிது என்று சொல்லலாம். அவர் ஒரு பெரிய இசைக் கலைஞர் மட்டும் என்று உலகத்தில் உள்ள அத்தனை மொழிகளில் உள்ளவர்களும் அவருடைய குரலுக்கு மயங்காதவர்கள் இல்லை. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என அத்தனை மொழி பேசுபவர்களும் அவரது பாடல்களை ரசித்து கேட்பார்கள்.

magic,singer,sp balasubramaniam,kalaipuli s thanu,mourning ,மேஜிக்,பாடகர்,எஸ்பி பாலசுப்பிரமணியம்,கலைப்புலி எஸ் தாணு,இரங்கல்

ஒரு செகண்டில் ஓராயிரம் மேஜிக் பண்ணக்கூடிய ஒரு அசாத்திய பாடகர். அசாத்திய திறமை உள்ளவர். நான் தயாரித்த 'தையல்காரன்' படத்திற்கு அவர் இசையமைக்கும் போது அவருடன் பணிபுரிந்த ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாக எனக்கு தெரிந்தது.

நான் தயாரித்த ஒரு படத்தில் அத்தனை பாடங்களையும் நீங்கள் பாடுங்கள் என்று நான் கூறியபோது, இல்லை எல்லோருக்கும் பிரித்துக் கொடுங்கள், என்னை மாதிரி எத்தனையோ கலைஞர்கள் இருக்கின்றார்கள் அவர்களுக்கும் வாழ்வு வேண்டும் என்று தனக்கு வந்த வாய்ப்புகளையும் சக பாடகர்களுக்கு பிரித்து கொடுத்தார். தான் மட்டும் வாழாமல் எல்லாரும் வாழ வைக்க வேண்டும் என்ற ஒரு உண்மையான ஏழை பங்காளன். உலகத்திலேயே சில குரல்கள் உருட்டும், மிரட்டும், ஆனால் இவரது குரல் உருக்கும், ஜெயிக்கும், கொஞ்சும், அழும். அவரது புகழ் வாழ்க. இவ்வாறு கலைப்புலி எஸ்.தாணு கூறியுள்ளார்.

Tags :
|
|