- வீடு›
- பொழுதுபோக்கு›
- சீவலப்பேரி பாண்டி படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் கமல்
சீவலப்பேரி பாண்டி படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் கமல்
By: Nagaraj Wed, 23 Dec 2020 1:26:08 PM
எனக்கு முன்னாடி சீவலப்பேரி பாண்டி படத்தில் நடிக்க கேட்கப்பட்டவர் கமல் என்று நடிகர் நெப்போலியன் தெரிவித்துள்ளார்.
1994 ஆம் ஆண்டு நெப்போலியன், சரண்யா பொன்வண்ணன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் சீவலப்பேரி பாண்டி. ஆதித்தன் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ரதி பிலிம்ஸ் சார்பில் ஸ்ரீகாந்த் என்பவர் தயாரித்திருந்தார். இந்த படம் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.
இந்நிலையில் சமீபத்தில் நெப்போலியன் கொடுத்த பேட்டியில் அந்த படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தவர் வேறு ஒரு முன்னணி நடிகர் என குறிப்பிட்டிருந்தார். பின்னர் அவரே சீவலப்பேரி பாண்டி படத்தை பார்த்துவிட்டு தன்னை பாராட்டியதாக மெய்சிலிர்த்துள்ளார்.
அவர் வேறு யாரும் இல்லை. உலக நாயகன் கமலஹாசன் தான். சீவலப்பேரி பாண்டி
படத்தின் கதை முதன்முதலில் கமல்ஹாசனிடம் தான் கூறப்பட்டதாம். ஆனால் இந்த
படத்தில் நடிக்க சிறு தயக்கம் காட்டி அந்த படத்தை வேண்டாம் என ஒதுங்கி
விட்டாராம். பின்னர் அந்த பட வாய்ப்பு நெப்போலியனுக்கு செல்ல, மாபெரும்
வெற்றிப்படமாக அமைந்தது.
இந்நிலையில் சீவலப்பேரி பாண்டி படத்தை
பார்த்துவிட்டு கமலஹாசன் நெப்போலியனை வெகுவாக பாராட்டி விட்டு, நான்
நடித்திருந்தாலும் படம் இவ்வளவு சிறப்பாக வந்திருக்குமா என்பது சந்தேகம்
தான் என உச்சி குளிர்ந்து விட்டாராம்.