- வீடு›
- பொழுதுபோக்கு›
- நடிகை ஜெயா பச்சனிடம் கேள்வி எழுப்பிய கங்கனா!
நடிகை ஜெயா பச்சனிடம் கேள்வி எழுப்பிய கங்கனா!
By: Monisha Wed, 16 Sept 2020 11:36:43 AM
நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு விசாரணையில் அவரது காதலி ரியா சக்கரவர்த்தியின் வாட்ஸ் அப் உரையாடலை ஆய்வு செய்த போலீசார் போதை பொருள் கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து நடிகை கங்கனா ரணாவத் கூறும்போது, "இந்தி திரையுலகில் கொக்கைன் போதை பொருள் தாராளமாக புழங்குகிறது. இந்த போதை பொருள் அதிக விலை கொண்டது. முன்னணி நடிகர்களின் வீடுகளில் நடக்கும் விருந்துகளில் இந்த போதை பொருளை இலவசமாக வழங்குகிறார்கள். நடிகர் நடிகைகளுக்கு ரத்த பரிசோதனை செய்தால் பலர் சிக்குவார்கள்" என்றார்.
இந்நிலையில், போதைப்பழக்கம் என்று பேசி, இந்தி திரையுலகின் நற்பெயரை கெடுக்க சிலர் சதி செய்வதாக மாநிலங்களவையில் சமாஜ்வாடி எம்.பி. நடிகை ஜெயா பச்சன் பேசினார்.
இதுகுறித்து நடிகை கங்கனா தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகை ஜெயா பச்சனிடம் கேள்வி எழுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
"எனது இடத்தில் உங்கள் மகள் ஸ்வேதா இருந்தால், நீங்கள் இப்படித்தான் பேசி இருப்பீர்களா? திரையுலகில் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சாட்டி, திடீரென ஒருநாள் தூக்கில் தொங்கியவர், உங்கள் மகன் அபிஷேக் பச்சனாக இருந்தால், நீங்கள் இப்படித்தான் பேசி இருப்பீர்களா? எங்கள் மீதும் கருணை காட்டுங்கள். என்றாவது ஒருநாள் பிரதமர் மோடியை சந்தித்தால், திரையுலகினரின் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பேன்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.