Advertisement

பிக்பாஸ் வீட்டில் பணப்பையை எடுத்துக் கொண்டு நடையை கட்டிய கதிரவன்

By: Nagaraj Wed, 18 Jan 2023 9:14:44 PM

பிக்பாஸ் வீட்டில் பணப்பையை எடுத்துக் கொண்டு நடையை கட்டிய கதிரவன்

சென்னை: பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கான பணப்பை வைக்கப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் அதை கதிரவன் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

பிக் பாஸ் சிசன் 6 ஆரம்பித்து தற்போது 90 நாட்களை கடந்துள்ளது. ஆரம்பத்தில் இந்த சீசனில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள். இதனை தொடர்ந்து பிக் பாஸ் ஓட்டிங்கின் படி சுமார் 15 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இதில் முதல் ஜிபி முத்து மற்றும் சாந்தி மாஸ்டர் வெளியேற்றப்பட்டார்கள்.

மேலும் ஜிபி முத்து வீட்டில் இருக்கும் போது காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. அந்தளவு சந்தோசமாக சக போட்டியாளர்களை வைத்துக்கொண்டார். இவர் வெளியேறிய பின்னர் பிரபல தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கிறார்.

purse,kathiravan,left,took,rivals ,பணப்பை, கதிரவன், வெளியேறினார், எடுத்தார், போட்டியாளர்கள்

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியேறிய போட்டியாளர்களில் சுமார் 10 போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வரவழைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டிலுள்ள பைனலிஸ்ட் போட்டியாளர்களுக்கான பணமூட்டை வைக்கப்பட்டது. இதில் ரூ.3 லட்சம் இருப்பதாக அறிவிப்பும் வெளியானது. இத்தொகை அதிகரிக்கலாம். அல்லது குறையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த பையை யார் எடுத்துக் கொண்டு வெளியேறுவார் என வெளியேறிய போட்டியாளர்களின் பரபரப்பு நிலை அதிகரித்தது.

ஆனால் யாருமே எதிர்பார்க்காத நிலையில் பணமூட்டை வைத்த சில நிமிடங்களிலேயே அந்த பையை கதிரவன் எடுத்து விட்டார். இதனால் சக போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். பணப்பையை எடுத்துக் கொண்ட கதிரவன் வீட்டிலிருந்தும் வெளியேறிவிட்டார்.

Tags :
|
|
|