- வீடு›
- பொழுதுபோக்கு›
- தலைவி படத்தில் எம்ஜிஆர் ஆக கடைசி நாள்; அரவிந்த்சாமி டுவிட்டர் பதிவு
தலைவி படத்தில் எம்ஜிஆர் ஆக கடைசி நாள்; அரவிந்த்சாமி டுவிட்டர் பதிவு
By: Nagaraj Wed, 16 Dec 2020 10:06:41 AM
எம்ஜிஆர் ஆக கடைசி நாள்... இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் அரவிந்த்சாமி, பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், சமுத்திரக்கனி, பூர்ணா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தலைவி.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் படமாக தலைவி படம் அமைந்துள்ளதால் இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இப்படத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் அரவிந்சாமி எம்ஜிஆர் வேடத்தில் நடிக்கிறார், நடிகை பூர்ணா சசிகலா கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் கங்கனா ரனாவத் தனது படப்பிடிப்பு பகுதியை முடித்து விட்டதாக
செய்திகள் வெளியான நிலையில் தற்போது நடிகர் அரவிந்த்சாமியின்
படப்பிடிப்பும் முடிந்துள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட நடிகர்
அரவிந்தஸ்வாமி தெரிவித்துள்ளதாவது:
"தலைவி படத்தின் கடைசி நாள்
படப்பிடிப்பு. இந்த படத்திற்காக புரட்சித்தலைவரின் அழகையும் வசீகரத்தையும்
முடிந்த அளவிற்கு நெருக்கமாக என்னிடம் அந்த மேஜிக்கை கடைசி முறையாக கொண்டு
வரும் ரஷீத் சாருக்கு எனது நன்றி. இவ்வாறு தெரிவித்துள்ளார்.