Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஆன்லைன் ரம்மியை ஒழிக்க நாடு முழுவதும் சட்டம் கொண்டு வர வேண்டும் - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி..

ஆன்லைன் ரம்மியை ஒழிக்க நாடு முழுவதும் சட்டம் கொண்டு வர வேண்டும் - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி..

By: Monisha Sat, 16 July 2022 6:18:29 PM

ஆன்லைன் ரம்மியை ஒழிக்க நாடு முழுவதும் சட்டம் கொண்டு வர வேண்டும் - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி..

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் பயிற்றுவிக்கப்படும் 5 ஆண்டு சட்ட படிப்புகளுக்கான, 2022-23 ஆண்டின் விண்ணப்ப பதிவை தரமணியில் உள்ள சட்ட பல்கலைக்கழக வளாகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், “ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக குழு அமைக்கப்பட்டு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த பரிந்துரைகளை ஆராய்கையில் இது தமிழக அரசு மட்டும் செய்யக்கூடிய ஒன்று அல்ல என்பது தெரிகிறது. தமிழகத்தில் தடை செய்தாலும், அண்டை மாநிலங்களில் இருந்து கூட விளையாடும் வாய்ப்பு இருக்கிறது.

இது தொடர்பாக மத்திய அரசிடம் கேட்டு பொதுவான சட்டம் வருவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். நாடு முழுவதும் சட்டம் கொண்டுவந்தால் தான் இதை ஒழிக்க முடியும்.

online,rummy,abolish,minister ,ஆன்லைன், ரம்மி,சட்டம்,ஒழிக்க,

தமிழகத்தில் ஒழிப்பதற்கான நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கும். வரும் 19-ம் தேதி மேகதாது வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடக்கிறது. இதுகுறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து இருக்கிறோம். தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

காரைக்குடி சட்டக் கல்லூரியில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடைபெறும்.தமிழகத்தில் தேவையான சட்டக்கல்லூரி உருவாக்க நிதி கூடுதலாக தேவைப்படுகிறது. இருந்தாலும் காரைக்குடியில் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும். கூடுதல் கல்லூரி உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

Tags :
|
|