- வீடு›
- பொழுதுபோக்கு›
- பறிபோனது ப்ளூ டிக்... பொன்னியின் செல்வன் பட நடிகர்களுக்கு வேதனை
பறிபோனது ப்ளூ டிக்... பொன்னியின் செல்வன் பட நடிகர்களுக்கு வேதனை
By: Nagaraj Tue, 18 Apr 2023 7:52:24 PM
சென்னை: ப்ளூ டிக் பறிபோனது... பொன்னியின் செல்வன் பட நடிகர்கள், டிவிட்டரில் தங்களது பெயரை படத்தின் கதாப்பாத்திரத்துக்கு ஏற்ப மாற்றியதால், அவர்களது ப்ளூ டிக் பறிபோயிருக்கிறது.
பொன்னியின் செல்வன் 2 படத்துக்கான புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சோழர்களின் பயணம் என்ற பெயரில், பொன்னியின் செல்வன் படக்குழுவினர், பல்வேறு நகரங்களுக்கும் சென்று படத்துக்கு புரமோஷன் செய்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் 1 வெளியான போது, விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் தங்களது டிவிட்டர் பக்கத்தில் அவர்களது பெயர்களை நீக்கிவிட்டு, பொன்னியின் செல்வன் கதாபாத்திரப் பெயர்களை மாற்றி வைத்துக் கொண்டனர். அது அப்போது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
ஆனால், அண்மையில், டிவிட்டர் தளத்தில் பல்வேறு விதிகள் கடுமையாக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான், பொன்னியின் செல்வன் 2 வெளியீட்டை முன்னிட்டு, த்ரிஷா, குந்தவை என்றும், ஜெயம் ரவி, அருண் மொழி என்றும் தங்களது டிவிட்டர் பக்கத்தில் பெயர்களை மாற்றியிருந்தனர். இதனால், அவர்களது ப்ளூ டிக் நீக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் மீண்டும் தங்களது பெயரை த்ரிஷா, ஜெயம் ரவி என மாற்றினர். ஆனாலும் இன்னமும் அவர்களுக்கு ப்ளூ டிக் கிடைக்கவில்லை. நல்லவேளையாக விக்ரமும், கார்த்தியும் அவர்களது டிவிட்டர் பக்கத்தில் பெயர்களை மாற்றவில்லை.