- வீடு›
- பொழுதுபோக்கு›
- நீண்ட ஆண்டுகளுக்கு பின் பரத்துடன் புகைப்படம் எடுத்த காதல் சந்தியா
நீண்ட ஆண்டுகளுக்கு பின் பரத்துடன் புகைப்படம் எடுத்த காதல் சந்தியா
By: Nagaraj Thu, 17 Dec 2020 10:15:14 PM
நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் பரத்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார் நடிகை சந்தியா.
காதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்தியா. இந்த படத்தில் பரத்துடன் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் நன்கு பிரபலம் அடைந்தார். அதன்பிறகு சிம்புவுடன் வல்லவன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
என்னதான் சந்தியா மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்தாலும் அவருக்கு பெயர் பெற்றுக் கொடுத்தது தமிழ் திரையுலகம் தான். அந்த அளவிற்கு இவர் மீதான எதிர்பார்ப்பை தமிழக ரசிகர்கள் வைத்திருந்தனர்.
நடிகைகளை பொருத்தவரை திருமணம் ஆகாத வரைக்கும் தான் படங்களில் நடிக்க
வாய்ப்பு கிடைக்கும் என பல நடிகைகள் கூறியுள்ளனர். அது சந்தியாவின்
வாழ்க்கையில் உண்மையாகி விட்டது. ஏனென்றால் இவரது திருமண வாழ்க்கைக்கு
பிறகு எந்த ஒரு படத்திலும் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு
கிடைக்கவில்லை என்றே கூறலாம்.
ஆனால் சந்தியா ஒரு சில படங்களில்
சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக தமிழில்
வெளியானது கத்துக்குட்டி எனும் திரைப்படம் தான். இந்த படத்தில் கூட இவர்
சிறப்பு தோற்றத்தில் தான் நடித்துள்ளார். சமீப காலமாக நடிகைகளைப்
பொறுத்தவரை வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் போட்டோஷூட் நடத்துவது மற்றும்
பழைய படங்களில் நடித்த நடிகருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு சமூக வலைதள
பக்கத்தில் வெளியிடுவது வாடிக்கைதான்.
ஆனால் இங்கு சற்று
வித்தியாசமாக பரத், காதல் சந்தியாவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை
வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் இவ்வளோ வருடம் கழித்தும்
இவர்கள் நண்பர்களாக இருப்பது பார்க்க சந்தோசமாக இருக்கிறது என்று கமெண்ட்
செய்து வருகின்றனர்.
ஏதோ பிரபல தொலைகாட்சியில் பேட்டி கொடுப்பது போல உள்ளது அந்த புகைப்படம். பரத் உடல் மெருகேறி பார்பதற்கு ஹாலிவுட் ஹீரோ போல உள்ளார்.