Advertisement

மணிரத்னம் நலமாக இருக்கிறார் - சுஹாசினி..

By: Monisha Tue, 19 July 2022 8:15:23 PM

மணிரத்னம் நலமாக இருக்கிறார் - சுஹாசினி..

காய்ச்சல் காரணமாக பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் மணிரத்தினம் நலமாக இருக்கிறார் என்று சுஹாசினி தகவல் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மணிரத்தினம் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார். அதில் முதல் பாகத்தை வெளியிடுவதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவை நடத்திய மணிரத்னம், அடுத்ததாக பாடல் வெளியீட்டு விழா மற்றும் படத்தின் இறுதி கட்டப் பணிகளை கவனித்து வருகிறார்.

mani ratnam,corona,fine,suhasini , மருத்துவமனை, பரிசோதனை,நலம்,
தனிமை,

இந்த நிலையில் மணிரத்னத்திற்கு காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று காலை மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சுஹாசினி கூறியுள்ளார்.

தன்னுடைய தந்தைக்கு 92 வயது, அதே போல் தாய்க்கு 88 வயது. எனவே தனிமைப்படுத்துவது அவசியம் என்பதால் மருத்துவமனையில் இருக்கிறோம் எனவும் கூறியுள்ளார்.அவர் நலமாக இருக்கிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|