- வீடு›
- பொழுதுபோக்கு›
- ரசிகர்கள் எதிர்பார்ப்பை எகிற வைத்த மணிரத்னம்... ஏப்ரல் மாதம் 2ம் பாகம் ரிலீஸ்
ரசிகர்கள் எதிர்பார்ப்பை எகிற வைத்த மணிரத்னம்... ஏப்ரல் மாதம் 2ம் பாகம் ரிலீஸ்
By: Nagaraj Wed, 28 Dec 2022 10:26:36 PM
சென்னை: பொன்னியின் செல்வன்-2 படம் எப்போது ரிலீஸ் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதனால் இப்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற விட்டுள்ளார் இயக்குனர் மணிரத்னம் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு எழ ஆரம்பித்து விட்டது.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என லைகா நிறுவனம் நேற்று அறிவித்து இருந்தது.
அந்த வகையில் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் பொன்னியின்
செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது.
இதனை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இந்த
படத்தின் இரண்டாம் பாகம் குறித்த வீடியோவை லைகா நிறுவனம் தனது டுவிட்டர்
பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
என்பது குறிப்பிடத்தக்கது
முதல் பாகம்
ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில் இரண்டாம் பாகம் அதைவிட இரு
மடங்கு வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.