Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • மாஸ் காட்டினார்... வழக்குப்பதிவு செய்தனர்; நடிகர் பவன் கல்யாணுக்கு ஏற்பட்ட சிக்கல்

மாஸ் காட்டினார்... வழக்குப்பதிவு செய்தனர்; நடிகர் பவன் கல்யாணுக்கு ஏற்பட்ட சிக்கல்

By: Nagaraj Tue, 15 Nov 2022 9:19:59 PM

மாஸ் காட்டினார்... வழக்குப்பதிவு செய்தனர்; நடிகர் பவன் கல்யாணுக்கு ஏற்பட்ட சிக்கல்

ஆந்திரா: துக்கத்தில் செல்லும் போது ரசிகர்கள் புடைசூழ முக்கிய சாலை வழியாக காரின் மேற்கூரையில் அமர்ந்து மாஸ் மற்றும் கெத்து காட்டி சென்ற நடிகர் பவன் கல்யாண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் சாலை விரிவாக்கப் பணிக்காக அங்குள்ள கிராமத்தில் மக்கள் அதிகம் வசித்த பகுதிகள் இடித்து தள்ளப்பட்டன. இதனால் பெரும்பாலான கிராம வாசிகள் தங்களின் வீடுகளை இழந்தனர்.

இதையறிந்த ஆந்திரா முன்னணி நடிகரும், ஜனசேனா என்ற கட்சியை நடத்தி வருபவருமான பவன் கல்யாண், வீடுகளை இழந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற இப்டாம் என்ற கிராமத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன் காரில் சென்றார்.

actor pawan kalyan,registration,police,complaint,information report ,நடிகர் பவன்கல்யாண், பதிவு, போலீசார், புகார், தகவல் அறிக்கை

அப்போது தனது ரசிகர்கள் புடைசூழ முக்கிய சாலை வழியாக காரின் மேற்கூரையில் சினிமா பாணியில் அமர்ந்து சென்றார். இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. உடன் வந்தவர்கள் பாதுகாப்பற்ற முறையில் தொங்கிக் கொண்டே நின்று சென்றனர். மேலும் இரு சக்கர வாகனத்தில் வந்த ரசிகர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றனர்.


இது தொடர்பாக காவல் நிலையத்தில் அளித்த புகாரில், பொதுமக்களுக்கு அச்சத்தையும், இடையூறை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டி சென்றதாக கார் டிரைவர் மீதும், காரில் மேல் அமர்ந்து சென்ற நடிகர் பவன் கல்யாண் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.


Tags :
|