- வீடு›
- பொழுதுபோக்கு›
- பிக் பாஸ் நிகழ்ச்சியில் சென்னையை சேர்ந்த மாடல் அழகி!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சென்னையை சேர்ந்த மாடல் அழகி!
By: Monisha Thu, 24 Sept 2020 11:30:01 AM
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவலை பார்த்து வருகிறோம். ரியோ ராஜ், ஷிவானி நாராயணன், கிரண் ரத்தோட், ஆஜித், கேப்ரில்லா, ரம்யா பாண்டியன், சஞ்சனா ஷெட்டி, பாடகர் வேல்முருகன், லட்சுமிமேனன் அம்ரிதா ஐயர், ஷாலு ஷம்மு, அனுமோகன் உள்பட ஒரு சிலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தெரிகிறது
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்டவர்கள் சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் சென்னையை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரகுமாரி என்ற சீரியலிலும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ள மாடல் அழகி சம்யுக்தா கார்த்திக் என்பவர் மிஸ் சென்னை பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் இவரும் சென்னை ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஏற்கனவே கடந்த சீசன்களில் மீராமிதுன் உள்பட ஒரு சில மாடல் அழகிகள் பிக்பாஸில் கலந்து கொண்ட நிலையில் தற்போது சம்யுக்தா கார்த்திக் என்ற மாடல் அழகியும் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.