Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பணமோசடி வழக்கு... நீதிமன்ற உத்தரவின் படி எஸ்.ஏ. சந்திரசேகர் மீது விசாரணை

பணமோசடி வழக்கு... நீதிமன்ற உத்தரவின் படி எஸ்.ஏ. சந்திரசேகர் மீது விசாரணை

By: Nagaraj Wed, 14 Dec 2022 11:05:23 AM

பணமோசடி வழக்கு... நீதிமன்ற உத்தரவின் படி எஸ்.ஏ. சந்திரசேகர் மீது விசாரணை

சென்னை: ட்ராபிக் ராமசாமி என்ற திரைப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமைக்காக பிரம்மானந்தம் சுப்பிரமணியம் என்பவரிடம் 21 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர், வெளியீட்டு உரிமையை வழங்காமலும் பணத்தையும் திருப்பித் தராமல் இழுத்தடிப்பதாகவும் புகார் கூறப்பட்டது.

இந்த வழக்கில் சிட்டி சிவில் நீதிமன்றம் அளித்த உத்தரவை எஸ்.ஏ.சந்திரசேகர் பின்பற்றவில்லை. பணத்தை கேட்க சென்றால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பிரம்மானந்தம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

police inspector,director,court,producer,investigatio ,காவல் ஆய்வாளர், இயக்குனர், நீதிமன்றம், தயாரிப்பாளர், விசாரணை

இதனை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் புகார் அளித்த தயாரிப்பாளர் மணிமாறன் மற்றும் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரிடம் இந்த மோசடி, மிரட்டல் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு விருகம்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீதான பண மோசடி புகார் குறித்து நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் மீண்டும் விசாரணை நடத்த உள்ளனர்.

Tags :
|