Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பிளாஸ்மா தானம் செய்ய முன்வரவேண்டும்; நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்

பிளாஸ்மா தானம் செய்ய முன்வரவேண்டும்; நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்

By: Monisha Wed, 15 July 2020 4:24:05 PM

பிளாஸ்மா தானம் செய்ய முன்வரவேண்டும்; நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறு லட்சத்தை நெருங்கி விட்டது. ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், இன்னொரு பக்கம் கொரோனா வைரஸிடமிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் பொதுமக்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் அனைத்து மாநில சுகாதார துறையும் கொரோனாவில் இருந்து குணமான அனைவரும் பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என்றும் அதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்றும் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.

corona virus,plasma,donation,actor vijay sethupathi,request ,கொரோனா வைரஸ்,பிளாஸ்மா,தானம்,நடிகர் விஜய் சேதுபதி,வேண்டுகோள்

அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

கொரோனாவிடம் இருந்து குணமடைந்த அனைவரும் பிளாஸ்மா தானம் செய்ய முன்வரவேண்டும். இதனால் கொரோனா வைரஸ் எளிதில் கட்டுப்படுத்தலாம். கொரோனாவிடம் இருந்து மக்களை காப்பாற்ற போராடி வரும் டாக்டர்களுக்கு பிளாஸ்மா தானம் பெரிதும் உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விஜய்சேதுபதியின் இந்த பதிவிற்கு உடனடியாக ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|