Advertisement

எனக்கு வந்த வாய்ப்பு... மிஸ் செய்து விட்டேன்: சோகத்தில் சினேகா

By: Nagaraj Sat, 14 Oct 2023 6:50:20 PM

எனக்கு வந்த வாய்ப்பு... மிஸ் செய்து விட்டேன்: சோகத்தில் சினேகா

சென்னை: சந்திரமுகி படத்தில் முதன்முதலில் நடிக்க இருந்தது நடிகை சினேகாவாம். இதை ஒரு பேட்டியில் அவரே வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் சந்திரமுகி. மலையாளத்தில் இருந்து ரீமேக் செய்யப்பட்டு இருந்தாலும், தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் திரைக்கதையை வடிவமைத்திருந்தார்.

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்திரமுகி 2ம் பாகம் 18 ஆண்டுகள் கழித்து வெளியானது. ரஜினிகாந்த் நடித்த ஹீரோ ரோலில் ராகவா லாரன்ஸ் நடிக்க சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருந்தனர்.

sneha,chandramukhi,sad,missed,jyotika,rajinikanth ,சினேகா, சந்திரமுகி, வருத்தம், மிஸ் செய்துட்டேன், ஜோதிகா, ரஜினிகாந்த்

உலகளவில் இப்படம் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தாலும் முதல் பாகத்திற்கு கிடைத்த அளவிற்கு இப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்திருந்த கங்கனா அந்த கதாபாத்திரத்தில் செட் ஆகவில்லை என பல விமர்சனங்களும் வந்தது.

இது ஒருபுறம் இருக்க சந்திரமுகி முதல் பாகம் குறித்து சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆமாங்க... சந்திரமுகி முதல் பாகத்தில் நான் தான் சந்திரமுகியாக நடித்திருக்க வேண்டும் என வருத்தத்துடன் கூறியுள்ளார் நடிகை சினேகா.

முதல் பாகத்தில் நடிகை சினேகாதான் முதன் முதலில் சந்திரமுகியாக நடிக்கவிருந்தாராம். ஆனால், சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக அவருக்கு பின் நடிகை ஜோதிகா சந்திரமுகியாக நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|