- வீடு›
- பொழுதுபோக்கு›
- நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர்கள்
நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர்கள்
By: Nagaraj Wed, 30 Sept 2020 12:00:08 PM
நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர்கள் போன் செய்து மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் இப்போது நடித்து முடித்த படம் சூரை போற்று அக்டோபர் மாதம் 30ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டார்.
அதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய நீதிபதி கடிதமும் எழுதினார். ஆனால் நீதிமன்றம் இது அவசியமில்லை என்று நிராகரித்தது. இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் இயங்கி வந்த நடிகர் சூர்யா அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர்கள் போனில் மிரட்டல் விடுத்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு
ஆய்வு மேற்கொண்ட போது அந்த அலுவலகம் கடந்த 6 மாதத்திற்கு முன்பே காலி
செய்து அடையாறுக்கு மாற்றி விட்டதும், வெடிகுண்டு மிரட்டல் பொய்யானது
என்றும் தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.