- வீடு›
- பொழுதுபோக்கு›
- கங்கனா ரணாவத் அவதூறுகளை திட்டமிட்டு பரப்பி வருகிறார்; நக்மா கண்டனம்
கங்கனா ரணாவத் அவதூறுகளை திட்டமிட்டு பரப்பி வருகிறார்; நக்மா கண்டனம்
By: Monisha Fri, 11 Sept 2020 12:11:45 PM
கங்கனா ரணாவத் அவதூறுகளை திட்டமிட்டு பரப்பி வருகிறார் என்று முன்னாள் கதாநாயகி நக்மா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நடிகை கங்கனா ரணாவத் இந்தி பட உலக வாரிசு நடிகர்கள் ஆதிக்கத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதுடன் மராட்டிய அரசையும் மும்பை போலீசையும் கடுமையாக சாடி வருகிறார். மும்பை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உள்ளது அங்கு எனக்கு பாதுகாப்பு இல்லை என்றும் விமர்சித்தார். இதனால் அவர் சொந்த மாநிலமான இமாசலபிரதேசத்தில் இருந்து மும்பை திரும்ப எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் எதிர்ப்பை மீறி போலீஸ் பாதுகாப்புடன் மும்பை திரும்பி உள்ளார்.
இந்த நிலையில் மும்பையை மட்டமாக பேசிய கங்கனா ரணாவத்துக்கு முன்னாள் கதாநாயகி நக்மா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
"கங்கனா ரணாவத் மராட்டியம் மற்றும் மும்பையின் பெயரை கெடுத்து வருகிறார். உலக அளவில் மும்பைக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
அதோடு இந்தி பட உலகையும் அவதூறு செய்கிறார். ஆரம்பத்தில் வாரிசு அரசியல் என்றும் இந்தி திரையுலகுக்குள் இருப்பவர்கள் வெளியே இருந்து வருபவர்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்றும் கூறினார். அதன்பிறகு மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்கிறார். இப்படி அவர் பேசுவது ஏற்கத்தக்கது அல்ல. அவதூறுகளை திட்டமிட்டு பரப்பி வருகிறார்" என்று கூறியுள்ளார்.