- வீடு›
- பொழுதுபோக்கு›
- தனது குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடிய நயன்
தனது குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடிய நயன்
By: vaithegi Mon, 28 Aug 2023 12:02:04 PM
கேரளாவின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்று, ஓணம். இந்தாண்டு இந்தப் பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது.
எனவே இதை முன்னிட்டு கடந்த சில நாட்களாகத் திரைப்பிரபலங்கள் ஓணம் சேலை அணிந்தபடி புகைப்படங்களைப் பதிவு செய்து வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதி, தங்கள் குழந்தைகள் உயிர், உலகத்துடன் முதல் ஓணம் பண்டிகையைக் கொண்டாடியுள்ளனர்.
இதையடுத்து இந்தப் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், ‘எங்களின் உயிர், உலகமுடன் ஓணம் பண்டிகை இங்கே தொடங்குகிறது.
மேலும் அனைவருக்கும் மகிழ்ச்சியான ஓணம் வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி கொண்டு வருகின்றன.