Advertisement

பந்தாவே இல்லாத நடிகை நயன்தாரா... நடிகை சரண்யா புகழாரம்

By: Nagaraj Sat, 15 Apr 2023 00:00:09 AM

பந்தாவே இல்லாத நடிகை நயன்தாரா... நடிகை சரண்யா புகழாரம்

சென்னை: கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு அம்மாவாக நடித்த சரண்யா பொன்வண்ணன் பேட்டி ஒன்றில், நம்பர் ஒன் நடிகையாக இருந்தாலும் நயன்தாரா மிகவும் சாதாரணமாகவே பழகுவார்.
ஹீரோக்களுக்கு இணையாக ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு தன்னுடைய திறமையால், உழைப்பால் உயர்ந்தவர் நடிகை நயன்தாரா. ஐயா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அதன்பின்னர், சந்திரமுகியில் சூப்பர் ஸ்டாருடன் நடித்தார்.

பின்னர், விஜய், சூர்யா, அஜித், விஷால், சிம்பு, உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையானார்.கடந்த ஆண்டு, அவரது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு கொண்டார். இவர்களுக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

நடிப்பில் கவனம் செலுத்தி வந்தாலும், குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதில் இருவருமே தவறுவதில்லை.

Tags :
|