- வீடு›
- பொழுதுபோக்கு›
- தேசிய விருது பெற்ற பின்னர் தான் திருமணம்; நயன்தாரா அதிரடி முடிவு
தேசிய விருது பெற்ற பின்னர் தான் திருமணம்; நயன்தாரா அதிரடி முடிவு
By: Monisha Fri, 02 Oct 2020 6:27:03 PM
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா திருமணத்திற்காக அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். அவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்துவருகிறார். அது தவிர ரஜினியுடன் அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார்.
நயன்தாரா டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலிப்பதும் இருவரும் திருமணத்தை தள்ளிப்போட்டுவிட்டு ஒன்றாக வசிக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள். இந்நிலையில் திருமணத்தை பொறுத்தவரை நயன்தாரா புது முடிவு எடுத்துள்ளார்.
தேசிய விருது பெற்ற பின்னர் தான் திருமணம் என முடிவு எடுத்திருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். நயன்தாராவுக்கு முன்பே அறம் படத்துக்காக தேசிய விருது கிடைக்க வேண்டியது. பல்வேறு பாராட்டுகளும் விருதுகளும் குவிந்தாலும் அவருக்கு இன்னும் தேசிய விருது மட்டும் கிடைக்கவில்லை.