- வீடு›
- பொழுதுபோக்கு›
- சம்பளத்தை இரட்டிப்பாக்கி அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா
சம்பளத்தை இரட்டிப்பாக்கி அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா
By: Nagaraj Fri, 25 Dec 2020 10:32:56 PM
நயன்தாராவின் அதிரடி முடிவு... தென்னிந்திய திரையுலகில் தற்போது முடிசூடா ராணியாக இருப்பவர் நடிகை நயன்தாரா. அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று திரையுலகிலும் தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகின்றார். அவரது ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று நயன்தாரா கெத்தாக அழைக்கப்படுவார்.
அத்துடன், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் "அண்ணாத்தே" படத்தில் நடிப்பதற்காக அவர் ஹைதராபாத் சென்றுள்ளார். அத்துடன், அவருடைய காதலர் விக்னேஷ் சிவன் இயக்குகின்ற 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்திலும் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். விக்னேஷின் சிவனின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் தான் நடைபெற்று வருகின்றது.
நடிகை நயன்தாரா கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் கூட இந்து மாதத்தில் அவருக்கு பெரிய நம்பிக்கை உள்ளது. கொரோனாவுக்கு முன்பு வரை காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து, கோவில் கோவிலாக சுற்றி திரிவதை வழக்கமா கொண்டவர் அவர். அதிலும், அவரது படங்கள் குறித்த முடிவை கூட ஜாதகம் பார்த்துவிட்டு தான் சொல்வார். அந்தளவிற்கு அவருக்கு கடவுள் நம்பிக்கை உண்டு.
மேலும், அவருடைய திருமணத்தை கூட தள்ளிப்போட காரணமே ஜாதகம் தான் என்று
கூறப்படுகிறது. இந்த நிலையில், நடிகை நயன்தாரா ஏற்கனவே சம்பள பட்டியலில்
முதன்மை இடத்தில் இருப்பவர். அவர் 4 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்பட்டது.
இருப்பினும், தற்போது மூக்குத்தி அம்மன் படத்தின் வெற்றிக்கு பின்னர்
அவருடைய சம்பளத்தை 8 கோடியாக உயர்த்தியுள்ளார்.
இதை கேட்ட
தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் ஷாக்காகி உள்ளனர். பாலிவுட் நடிகைகள்
கூட இவ்வளவு சம்பளம் வாங்கியதில்லை. அத்துடன், படங்களில் கமிட் செய்ய
நயன்தாராவை கேட்ட பொழுது கேட்ட சம்பளம் கொடுத்தால் கவர்ச்சி காட்டவும்
தயார் என்று சிம்பிளாக முடித்துவிட்டாராம்.