- வீடு›
- பொழுதுபோக்கு›
- பார்ட்டி கொடுத்த புகைப்படங்களை பார்த்து ஆர்யன்கானை விளாசும் நெட்டிசன்கள்
பார்ட்டி கொடுத்த புகைப்படங்களை பார்த்து ஆர்யன்கானை விளாசும் நெட்டிசன்கள்
By: Nagaraj Thu, 30 Mar 2023 11:10:09 AM
மும்பை: ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் புதிதாக D'YAVOL எனும் பிராண்டை ஆரம்பித்துள்ளார். அதற்காக டிவி நடிகைகள் மற்றும் பாலிவுட் பிரபலங்களுக்கு அவர் பார்ட்டி கொடுத்த புகைப்படங்கள் வெளியான நிலையில், ஆர்யன் கானை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் மீது எந்தவொரு குற்றமும் இல்லை என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு மகனை மீட்டெடுத்தார் ஷாருக்கான்.
இந்நிலையில், ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் புதிதாக D'YAVOL எனும் பிராண்டை ஆரம்பித்துள்ளார். அதற்காக டிவி நடிகைகள் மற்றும் பாலிவுட் பிரபலங்களுக்கு அவர் பார்ட்டி கொடுத்த புகைப்படங்கள் வெளியான நிலையில், ஆர்யன் கானை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
ஏற்கனவே போதைப் பொருள் வழக்கில் சிக்கித்தான் ஆர்யன் கானை ஷாருக்கான் ஜாமினில் எடுத்தார். ஆனால், தற்போது புதிதாக சரக்கு பிராண்டை வேற ஆரம்பித்து இப்படி நடிகைகளுடன் லூட்டி அடிக்கிறாரே எங்கே போய் சிக்கப் போகிறாரோ என நெட்டிசன்கள் ஆர்யன் கானை விளாசி வருகின்றனர்.