Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • கமல் மீதே குற்றச்சாட்டு வைத்த அனிதாவை கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்

கமல் மீதே குற்றச்சாட்டு வைத்த அனிதாவை கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்

By: Nagaraj Mon, 16 Nov 2020 8:03:10 PM

கமல் மீதே குற்றச்சாட்டு வைத்த அனிதாவை கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்

கமல் மீது குற்றச்சாட்டு வைக்க ஆரம்பித்துள்ள அனிதாவுக்கு கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள். பிக்பாஸ் வீட்டின் அடுத்த ஜுலி, வனிதா என்றால் அது அனிதாதான் என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை எபிசோட்களில் நிறைய பஞ்சாயத்துகள் தீர்க்கப்படும். சில ஊதி பெருக்கப்படும். ஆனாலும் அநேகம் ஹாப்பி எண்டிங்தான். நேற்றும் அப்படித்தான் என்றாலும், பஞ்சாயத்து தலைவரையே சிக்க வைக்க நடந்த பேச்சுதான் ஆடியன்ஸையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. வழக்கம் போல் ஒவ்வொரு விஷயமாக விசாரித்துக் கொண்டே வந்தார் கமல். சாப்பாட்டில் பார்ஷியாலிட்டியா என்ற வாதம் கொஞ்ச நேரம் ஓடியது. அதில் ஒண்ணும் சுவாரஸியமில்லை. அதனால், செடிகளைப் பார்க்க விரும்புகிறேன் என வண்டியைத் திருப்பினார் கமல்.

எல்லோரும் செடியைக் கொண்டு வந்து காட்ட, எல்லோ செடிகளையும் ரம்யா கவனித்துக்கொள்வதாகச் சொல்ல வாழ்த்துகளை வாங்கிக்கொண்டார். அதுவும் பட்டுப்போன செடித் தொட்டியில் வெந்தயம் விதைத்து வளர்த்தாராம். செடிகளை வைச்சே கின்னஸ் சாதனை செய்த ஆரி, தனக்கு கொடுக்கப்பட்ட ஒரு செடியை ஒழுங்காக வளர்க்கவில்லை.

kamal,anita,accusation,denunciations,big boss ,கமல், அனிதா, குற்றச்சாட்டு, கண்டனங்கள், பிக்பாஸ்

லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் பற்றி பேச்சை நகர்த்தினார் கமல். விசாரணையின்போது 'திருடன் கையிலேயே சாவி' என்றதும், ஆடியன்ஸைப் பார்த்து பேசி, அதை அரசியல் பன்ச்சாக மாற்றினார். ஹானஸ்ட், ஹானாஸ்ட்டி பற்றிய விஷயத்துக்கு வந்தார் கமல். கேபி ஏற்கெனவே சொன்னதை திரும்ப விளக்க, ஷிவானிதான் ஊக்குவித்தார் என்ற ரகசியத்தைச் சொல்லாதிருக்க பாலா குட்டிக்கரணம் எல்லாம் போட்டார். ஆனா, கமல் போட்டு உடைக்க நினைக்க, நானே அப்ரூவராகிறேனு சுசி, ஷிவானிதான் டிரிக்கர் பண்ணினாருனு தெறிக்க விட்டு பல்டி அடித்தார்.

ஆரியுடன் சண்டை குறித்து சில விளக்கங்கள் கொடுக்கணும்னு அனிதா முன்வந்தார். ஏற்கெனவே நீண்ட விளக்கம் கொடுத்திருந்தார். அதனால், மீண்டும் பேச ஆரம்பித்து வண்டியை ஒரே இடத்தில் ஓட்ட ஆரம்பித்ததும், 'எனக்கு புரிஞ்சிட்டுச்சு. வீட்டுல யாருக்காவது புரியல்லன்னா தனியா பேசி புரிய வைங்க'னு சட்டென்று கதைவைச் சாத்தினார் கமல். அனிதா முகம் இருண்டது.

கமல் பிரேக் விட்டுச் சென்றிருந்த நேரத்தில் ஷனமிடம் அனிதா அணத்திட்டு இருந்தார். 'நான் ஒண்ணுமே செய்யல, கமல் சார் ஏன் பேசவே விட மாட்டேங்குறார்'னு பஞ்சாயத்து தலைவரையே விசாரணை கூண்டில் ஏற்றும் ஐடியாவை இறக்கினார். அதைக் கேட்டு ஷனம்க்கு கொஞ்சம் ஜெர்க்தான். 'உன் மேல வருத்தமா இருக்கார் அவர்'னு பொதுவாகச் சொல்லி வைச்சார். பேச ஸ்பேஸ் கொடுக்கலனு இதுவரை ஹவுஸ்மேட்ஸைத்தான் சொல்லி வந்தார் அனிதா.

அதுவும் அடிக்கடி மாட்டுவது ரியோதான். அரை மணி நேரம் அனிதா பேசி முடித்ததும், ரியோ பேச ஆரம்பிக்கும்போதெல்லாம் நான் இன்னும் பேசிமுடிக்கல. என அதிர வைப்பார் அனிதா. இப்போ அவரின் பிராது கமல் மீதேவா. அனிதாவின் இந்த நடவடிக்கையை பார்த்து நெட்டிசன்கள் அவருக்கும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். சீக்கிரம் வீட்டை விட்டு அனுப்புங்கள் பிக் பாஸ் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

Tags :
|
|