- வீடு›
- பொழுதுபோக்கு›
- அசல் கோளாறு வெளியேற்றப்பட்டதால் கதறி, கதறி அழுத நிவாஷினி
அசல் கோளாறு வெளியேற்றப்பட்டதால் கதறி, கதறி அழுத நிவாஷினி
By: Nagaraj Mon, 31 Oct 2022 7:31:38 PM
சென்னை: அசல் கோளாறு எலிமினேட் ஆகி வெளியில் சென்ற பிறகு நிவாஷினி கதறி கதறி அழுதார்.
பிக்பாஸ் 6ம் சீசனில் இருந்து அசல் கோளாறு எலிமினேட் ஆகி இருக்கிறார். இறுதியில் அசீம் மற்றும் அசல் கோளாறு இருவரும் மட்டும் எலிமினேஷன் லிஸ்டில் இருந்தனர். யார் காப்பாற்றப்படுவார் என நினைகிறீங்க என கமல் கேட்டபோது பலரும் அசல் தான் உள்ளே இருப்பார் என கூறினார்கள்.
குறிப்பாக நிவாஷினி அசல் கண்டிப்பாக இங்க இருக்கனும் என கூறினார். 'என்னை எதற்காக இங்கே நிற்க வைத்தார்கள் என தெரியவில்லை' என அசல் கோளாறு கூறினார். இறுதியில் அசல் எலிமினேட் ஆகி வெளியில் சென்ற பிறகு நிவாஷினி கதறி கதறி அழுதார்.
அசல் கோளாறை வெளியில் அனுப்பும் முன்பு கமல் ஒரு விஷயம் சொன்னார். "எதற்காக இங்கே நிறுத்திட்டாங்க என கேட்டீங்க. வெளியே போய் உங்க நண்பர்களிடம் கேளுங்க, சொல்லுவாங்க' என கூறினார். பெண்களிடம் எல்லை மீறியது பற்றி தான் மறைமுகமாக கமல் அப்படி கூறி வெளியில் அனுப்பி வைத்திருக்கிறார்.