Advertisement

ஊருக்கு செல்ல தடையில்லை; பிரித்விராஜ்க்கு கொரோனா இல்லை

By: Nagaraj Thu, 04 June 2020 10:56:05 AM

ஊருக்கு செல்ல தடையில்லை; பிரித்விராஜ்க்கு கொரோனா இல்லை

நடிகர் பிரித்விராஜ்க்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சிகிச்சையில் அவருக்கு நோய் பாதிப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.

ஊரடங்கினால் உலகின் பல நாடுகளிலும் விமானப் போக்குவரத்து சேவையானது முடக்கப்பட்டள்ளது. நடிகர் பிரித்விராஜ் ஆடுஜீவிதம் படத்தில் நடிப்பதற்காக ஜோர்டான் நாடு சென்றிருந்தார். விமான சேவைகள் நிறுத்தப்பட அவர் வீடு திரும்ப முடியாமல் இருந்துவந்தார்.

மேலும் பாலைவனத்தில் உணவு கிடைப்பதும் சிரமமாக உள்ளது என அவர் வலைதளங்களில் பதிவிட அவரது தாயார் படக் குழுவினரை மீட்டு வரச் செய்யுங்கள் என்று கேரள அரசிடம் வேண்டுகோள் விடுக்க, மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின்படி, ஆடு ஜீவிதம் படக்குழுவினர் 57 பேர் விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

actor prithviraj,experiment,korena,no,obstacles ,நடிகர் பிரித்விராஜ், பரிசோதனை, கொரேனா, இல்லை, தடைகள்

டெல்லியில் இருந்து கொச்சின் வந்தடைந்த அவர்கள் தற்போது கொச்சினில் உள்ள ஒரு ஹோட்டலில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். இவருடன் சேர்த்து மீதமுள்ள 56 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில் நடிகர் பிரித்விராஜ்க்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரேனா இல்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் அவர் ஊர் திரும்ப இருந்த தடைகள் விலகி உள்ளன.

Tags :
|
|