Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • அமீரின் நேர்மையை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை... கொந்தளித்த பாடலாசிரியர் சினேகன்

அமீரின் நேர்மையை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை... கொந்தளித்த பாடலாசிரியர் சினேகன்

By: Nagaraj Mon, 27 Nov 2023 4:26:30 PM

அமீரின் நேர்மையை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை... கொந்தளித்த பாடலாசிரியர் சினேகன்

சென்னை: யாருக்கும் உரிமை இல்லை... இயக்குனர் அமீரின் நேர்மையை மதிப்பிடவும், ஒருவரை விமர்சிக்கவும் யாருக்கும் உரிமை இல்லை’ என பாடலாசிரியர் சினேகன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‘பருத்திவீரன்’ படம் வெளியாகி 16 வருடங்கள் ஆன நிலையில், அந்தப் படம் குறித்த சர்ச்சை பரபரப்பாகியுள்ளது. இயக்குனர் அமீர் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியது பெரும் சர்ச்சையில் உள்ள நிலையில், அமீருக்கு ஆதரவாகவும், ஞானவேலின் பேச்சுக்கு திரையுலக கலைஞர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

director aamir,integritysnegan,record ,சினேகன், விவகாரம், பருத்திவீரன், இயக்குனர் அமீர்

சசிகுமார், சமுத்திரக்கனி, சுதா கொங்கரா, பொன்வண்ணன் ஆகியோர் இயக்குனர் அமீருக்கு ஆதரவாக உள்ளனர். இந்நிலையில் பாடலாசிரியர் சினேகன் எக்ஸ் பக்கத்தில் இயக்குனர் அமீர் ஆதரவு பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “இயக்குனர் அமீரின் முதல் படத்திலிருந்து இன்று வரை அவருடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். அவருடைய நேர்மையை எடைபோட யாருக்கும் தகுதி இல்லை. பருத்தி வீரனை முடிக்க அவர் எவ்வளவு சிரமப்பட்டார் என்பது அவருடன் பயணித்த என்னைப் போன்றவர்களுக்கு மட்டுமே தெரியும். ஒருவரைக் குறை கூறுவதற்கான அறம் தெரிந்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :