Advertisement

போ புயலே... போய்விடு... நிவர் புயல் குறித்து கவிஞர் வைரமுத்து!

By: Monisha Wed, 25 Nov 2020 11:11:32 AM

போ புயலே... போய்விடு... நிவர் புயல் குறித்து கவிஞர் வைரமுத்து!

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நிவர் புயல் குறித்து திரையுலகைச் சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் விழிப்புணர்வு டுவிட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்

இன்று ஒருநாள் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் புயலை சாதாரணமாக நினைக்க வேண்டாம் என்றும் பல நடிகர்கள் நடிகைகள் டுவிட்டர் மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர் அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தனது பாணியில் கவிதை ஒன்றை பதிவு செய்துள்ளார்.அந்த கவிதையில் அவர் கூறியிருப்பதாவது:-

nivar storm,poet,vairamuthu,poetry ,நிவர் புயல்,கவிஞர்,வைரமுத்து,கவிதை

போ புயலே
போய்விடு

பச்சைமரம் பெயர்த்துப்
பல் துலக்காமல்

வேய்ந்தவை பிரித்து
விசிறிக் கொள்ளாமல்

குழந்தையர் கவர்ந்து
கோலியாடாமல்

பாமர உடல்களைப்
பட்டம் விடாமல்

சுகமாய்க் கடந்துவிடு
சுவாசமாகி விடு

ஏழையரின்
பெருமூச்சை விடவா நீ
பெருவீச்சு வீசுவாய்?

Tags :
|