- வீடு›
- பொழுதுபோக்கு›
- ராணி எலிசபெத் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவிப்பு
ராணி எலிசபெத் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவிப்பு
By: vaithegi Sat, 10 Sept 2022 10:17:04 AM
சென்னை, ராணி எலிசபெத் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் ...... பிரிட்டன் ராணி எலிசபெத் மறைவுக்கு பல்வேறு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து கொண்டு வருகின்றனர்.
இதனை அடுத்து இந்த நிலையில் ராணி மறைவுக்கு கவிஞர் வைரமுத்து தனது இரங்கல் தெரிவித்து தன்னுடைய டுவீட்டரில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அதில் அவர் கூறும்போது,
"எழுபது ஆண்டுகள் அரசாண்ட முதல் அரசி, 17 பிரதமர்கள் கண்ட முதல் மகாராணி, ராஜ குடும்பத்தின் முதல் பொறி நெறியாளர், ராணுவப் பணி செய்த முதல் அரண்மனைப் பெண், அரசி எனில் தானே என உலகை உணரவைத்த முதல் ராணி
உங்களோடு கை குலுக்கியது என் உள்ளங்கைப் பெருமை, உங்கள் புகழைக் காலம் சுமந்து செல்லும்". என தன்னுடைய டுவீட்டரில் கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
Tags :