- வீடு›
- பொழுதுபோக்கு›
- வருகிற 15-ல் ‘பொன்னியின் செல்வன் ஆன்ந்தம்’ வெளியீடு
வருகிற 15-ல் ‘பொன்னியின் செல்வன் ஆன்ந்தம்’ வெளியீடு
By: vaithegi Thu, 13 Apr 2023 3:04:30 PM
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்களாகத் திரைப்படமாக்கி இருக்கிறார். இதன் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பரில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸும் இணைந்துத் தயாரித்திருந்த இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இதன் 2-ம் பாகம் வரும் 28-ம் தேதி வெளியாகிறது. 1 பாகம் அதிக வரவேற்பைப் பெற்றதால், இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வருகிற 16ம் தேதி முதல் இந்தப் படத்தின் புரமோஷன் தொடங்குகிறது. முதல் பாகத்தைப் போல இந்தப் பாகத்தின் புரமோஷனுக்கும் படக்குழுவினர் இந்தியா முழுவதும் செல்ல இருக்கின்றனர்.
இதன் இடையே ‘பொன்னியின் செல்வன் ஆன்ந்தம்’ தனிப் பாடல் இந்தப் படத்துக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலை சிவா ஆனந்த் எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து பாடியுள்ளார். இதனை அடுத்து இது, வருகிற 15ம் தேதி வெளியாக இருக்கிறது.