Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பொன்னியின் செல்வன்-2 ட்ரெய்லர் வரும் 29ம் தேதி ரிலீஸ் என்று அறிவிப்பு

பொன்னியின் செல்வன்-2 ட்ரெய்லர் வரும் 29ம் தேதி ரிலீஸ் என்று அறிவிப்பு

By: Nagaraj Fri, 24 Mar 2023 11:14:00 PM

பொன்னியின் செல்வன்-2 ட்ரெய்லர் வரும் 29ம் தேதி ரிலீஸ் என்று அறிவிப்பு

சென்னை: ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து அறிவிப்பு... பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. கல்கி எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக திரிஷாவும், நந்தினி தேவியாக ஐஸ்வர்யா ராய் பச்சனும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர்.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகத்திற்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்த காரணத்தால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பானது மக்களிடம் அதிகளவு மேலோங்கி காணப்படுகிறது.

trailer,announcement,onnis selvan,mani ratnam,film crew ,ட்ரெய்லர், அறிவிப்பு, ொன்னியின் செல்வன், மணிரத்னம், படக்குழு

அண்மையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான புரோமோஷன் வேலைகளை தொடங்கிய படக்குழு படம் தொடர்பான புரோமோக்களை வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து படத்தின் முதல் பாடலான ‘அகநக’ பாடலானது கடந்த மார்ச் 20 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லரானது வருகிற மார்ச் 29 ஆம் தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு திரையரங்கில் பிரமாண்டமாக நடைபெற இருப்பதாக சொல்லப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மட்டுமல்லாமல் முக்கிய திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது. அணமையில் இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் பாரதிராஜாவை மணிரத்னம் நேரில் சென்று அழைத்ததாக கூறி அவர்கள் சந்தித்த போட்டோ சமூகவலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது

Tags :