- வீடு›
- பொழுதுபோக்கு›
- பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு வெளிநாட்டில் தொடங்க உள்ளதாக தகவல்!
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு வெளிநாட்டில் தொடங்க உள்ளதாக தகவல்!
By: Monisha Thu, 03 Sept 2020 5:17:00 PM
கொரோனா பரவல் காரணமாக தடைபட்டிருந்த பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு மீண்டும் வெளிநாட்டில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
மணிரத்னம், பொன்னியின் செல்வன் பட வேலைகளை கடந்த வருடம் தொடங்கினார். இந்த படத்தில் நடிக்க விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம் ரவி, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யாராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டனர். தாய்லாந்து காடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. சென்னையில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை மீண்டும் தொடங்க இருந்த நேரத்தில் கொரோனாவால் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், படப்பிடிப்புக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொன்னியின் செல்வன் படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பை இலங்கையில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக படக்குழுவினர் வருகிற செப்டம்பர் 20-ந் தேதி இலங்கை செல்ல உள்ளதாகவும், அங்கு ஒரு மாதம் படப்பிடிப்பை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.