Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பாலியல் புகார் கொடுத்த நான்கே நாட்களில் மீண்டும் சமாதானம் ஆகிய பூனம் பாண்டே!

பாலியல் புகார் கொடுத்த நான்கே நாட்களில் மீண்டும் சமாதானம் ஆகிய பூனம் பாண்டே!

By: Monisha Mon, 28 Sept 2020 11:26:45 AM

பாலியல் புகார் கொடுத்த நான்கே நாட்களில் மீண்டும் சமாதானம் ஆகிய பூனம் பாண்டே!

பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே தனது நீண்டநாள் காதலர் சாம் பாம்பே என்பவரை செப்டம்பர் 10ஆம் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணமான ஒரே நாளில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்பின் அவர் திடீரென திருமணமான 13 நாட்களில் தனது கணவர் சாம் பாம்பே மீது பாலியல் புகார் ஒன்றை கூறி அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.

தனது கணவர் சாம் பாம்பே தன்னை பாலியல் ரீதியாக தொல்லை செய்வதாகவும், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் அவரது கணவர் சாம்பே அதிரடியாக கைது செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

sexual complaint,actress poonam pandey,sam bombay,peace,marriage ,பாலியல் புகார்,நடிகை பூனம் பாண்டே,சாம் பாம்பே,சமாதானம்,திருமணம்

இந்த நிலையில் தற்போது பூனம் பாண்டே தனது கணவருடன் சமாதானம் ஆகிவிட்டதாக அவரே அறிவித்துள்ளார். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் வெறித்தனமாக நேசிப்பதாகவும், தங்களுக்குள் இருந்த பிரச்சனைகள் பேசி தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், எந்த குடும்பத்தில் தான் சண்டை சச்சரவு, ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

கணவர் மீது திருமணமான 13வது நாளே பாலியல் புகார் கொடுத்த பூனம் பாண்டே அதன்பின்னர் நான்கே நாட்களில் மீண்டும் சமாதானம் ஆகியுள்ளதால் அவரது குடும்பத்தில் என்னதான் நடக்குது? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Tags :
|