- வீடு›
- பொழுதுபோக்கு›
- தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பு: பிரபல ஒளிப்பதிவாளர் கைது
தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பு: பிரபல ஒளிப்பதிவாளர் கைது
By: Monisha Fri, 29 May 2020 3:35:30 PM
பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் ’அர்ஜுன் ரெட்டி’. இந்த திரைப்படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பிரபல ஒளிப்பதிவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
’அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை சுதா ரெட்டி என்பவர் பிரபல ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே நாயுடு என்பவர் மீது எஸ்ஆர் நகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரில் ஷ்யாம் கே நாயுடு அவர்கள் தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்ததாகவும், அதன்பின் தற்போது திருமணம் செய்ய மறுப்பதாகவும் அதுமட்டுமின்றி தன்னை பிளாக்மெயில் செய்வதாகவும் அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் ஷ்யாம் கே.நாயுடுவை கைது செய்த போலீசார் அவரிடம் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.