Advertisement

தனது தம்பி மகளுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா

By: Nagaraj Wed, 14 Sept 2022 11:33:20 PM

தனது தம்பி மகளுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா

சென்னை: தம்பி மகளுடன் உள்ள புகைப்படம்... விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளியான பிரியங்கா தனது தம்பி மகளுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், விஜய் டிவி ஸ்டார்ஸ் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரியாலிட்டி ஷோக்கள் நடத்துவதில் முன்னணியில் இருந்து வரும் விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளினியாக இருப்பவர் பிரியங்கா. முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து வழங்கி வரும் பிரியங்காவின் பேச்சை கேட்கவே ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர் என்று சொல்லாம். கலகலப்பான பேச்சு, பாடல் நடனம், எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் தனது தனி முத்திரையை பதிப்பதில் பிரியங்கா வல்லவர்.

ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள பிரியங்கா கடந்த பிப்காஸ் சீசனில் பங்கேற்று 2-வது இடம் பிடித்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு நண்பர்கள் பலர் கிடைத்த நிலையில், அவ்வப்போது அவர்களுடன் வெளியூர் செல்வது அவுட்டிங் செல்வது என பிரியங்கா தனது சமூக வலைதளத்தை எப்போதும் பிஸியாக வைத்துள்ளார்.

இது போதும் எனக்கு என்று கேப்ஷனுடன் பதிவு செய்துள்ள பிரியங்கா போஸ்ட்க்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. தனது கலகலப்பான பேச்சால் பலரது கவலைகளை மறக்கச் செய்த பிரியங்காவிற்கு தம்பி மகளே கவலை மற்றும் வலிகளை மறக்கச் செய்வதாக உணர்வுபூர்வமாக கூறியுள்ளார்.

fans,greetings,world,posted by priyanka ,ரசிகர்கள், வாழ்த்துக்கள், உலகம், பதிவிட்டுள்ளார், பிரியங்கா

இது மட்டுமல்லாது அவ்வப்போது தனது போட்டோஷூட் உள்ளிட்ட புகைப்படங்களை பகிர்ந்து வரும் பிரியங்கா, தனது தம்பியின் குடும்பத்தை விட்டுக்கொடுக்காமல் அவ்வப்போது அவர்கள் குறித்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார். மேலும் தனது தந்தை போலவே தம்பி தனது குடும்பத்தை பார்த்துக்கொள்வதாகவும் கூறியிருந்தார்.

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தம்பிக்கு அழகான பெண் குழந்தை பிறந்ததாக பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருந்தார். மேலும் அந்த பெண் குழந்தைக்கு இஹா என்று பெயரிட்டுள்ளதாகவும் கூறிய பிரியங்கா தற்போது தனது தம்பி மகள் புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்டுள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'பரபரப்பான ஒரு வாரத்திற்கு பின் தன்னுடைய தம்பி மகள் இஹாவை பார்த்ததும் மன கவலைகளும், வலிகளும், பறந்து விட்டன, இது மிகப் பெரிய மகிழ்ச்சியான தருணம்.

இஹா தான் என்னுடைய உலகம். இது போதும் எனக்கு'என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த விஜய் டிவி ஸ்டார்ஸ் மட்டுமல்லாமல் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags :
|
|