Advertisement

மாநாடு படம் குறித்து தயாரிப்பாளர் டுவிட்!

By: Monisha Mon, 20 July 2020 3:11:00 PM

மாநாடு படம் குறித்து தயாரிப்பாளர் டுவிட்!

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், சிம்பு நடிக்கும் 'மாநாடு' திரைப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். இந்த படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. சென்னையிலுள்ள விஜிபி கோல்டன் பீச் உள்பட ஒருசில இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது திடீரென கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது

இந்த நிலையில் இந்த கொரோனா விடுமுறையில் பல திரைப்படங்களின் அப்டேட்டுக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் 'மாநாடு' திரைப்படத்தின் எந்த அப்டேட்டும் வெளிவராததால் சிம்பு ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இதனையடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தளத்தில் 'மாநாடு' படம் குறித்து ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார்.

conference film,suresh kamatchi,venkatprabhu,tweet,shooting ,மாநாடு படம்,சுரேஷ் காமாட்சி,வெங்கட்பிரபு,டுவிட்,படப்பிடிப்பு

'மாநாடு' படம் குறித்த அப்டேட்டை பலரும் அடிக்கடி கேட்டு வருகின்றனர். தற்போது நாங்கள் மட்டுமின்றி தமிழ் திரையுலகமே அரசின் அனுமதிக்காக காத்திருக்கின்றோம். அரசு பச்சைக்கொடி காட்டியவுடன் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துவருகிறார். மேலும் இந்த படத்தில் பாரதிராஜா, எஸ்ஏ சந்திரசேகர், எஸ்ஜே சூர்யா, பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|