- வீடு›
- பொழுதுபோக்கு›
- ரச்சிதாவின் செந்தமிழ்... சத்தம் போட்டு சிரித்த கமல்
ரச்சிதாவின் செந்தமிழ்... சத்தம் போட்டு சிரித்த கமல்
By: Nagaraj Mon, 21 Nov 2022 10:19:52 AM
சென்னை: முடியலை... ரச்சிதாவின் செந்தமிழை கேட்டு கமல் சொன்னது இதுதான். என்ன தெரியுங்களா. விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பரபரப்பாக நடந்து வருகிறது. ராஜா ராணி டாஸ்க்கில் செந்தமிழ் பேச வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார்.
செந்தமிழ் பேச வேண்டும் என்பதால் தண்ணீர் என்று கேட்காமல், ராபர்ட் மாஸ்டரிடம் சிறுநீர் கேட்கிறார் ரச்சிதா. ராபர்ட் மாஸ்டர் தமிழ் பிழையை சரி செய்யாமல், இதோ ராணி கொண்டு வருகிறேன் என்று கூறியது ரசிகர்கள் அனைவரையும் சிரிக்க வைத்தது.
அதைப் பார்த்து சத்தம் போட்டு சிரித்தேன், எழுதினாலும் இப்படி ஒரு
நகைச்சுவை வராது என்று நேற்றைய நிகழ்ச்சியில் கமல் கூறினார். இது
அனைவரையும் சிரிக்க வைத்தது.
இந்த ராயல் மியூசியம் டாஸ்க்கில்
அத்திப்பழம் போல் விழுந்த நகைச்சுவை இது என்று நடிகர் கமல்
சிரித்துக்கொண்டே இந்த விவகாரத்தை பேசி முடித்தார்.