Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • போயஸ் கார்டன் பகுதி முழுவதும் சொந்த செலவில் சிசிடிவி கேமரா வைக்க ரஜினி முடிவு

போயஸ் கார்டன் பகுதி முழுவதும் சொந்த செலவில் சிசிடிவி கேமரா வைக்க ரஜினி முடிவு

By: Monisha Wed, 09 Dec 2020 4:38:08 PM

போயஸ் கார்டன் பகுதி முழுவதும் சொந்த செலவில் சிசிடிவி கேமரா வைக்க ரஜினி முடிவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் வருகையை சமீபத்தில் உறுதி செய்தார். தமிழருவி மணியன் மற்றும் அர்ஜுனா சம்பத் ஆகிய இருவரையும் ரஜினி மக்கள் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றும் பணிக்கு நியமனம் செய்தார்.

இந்த நிலையில் ரஜினியின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு டிசம்பர் 31-ஆம் தேதி வெளிவரும் என்றும் ஜனவரி மாதம் முதல் கட்சி தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ரஜினியின் அரசியல் அறிவிப்பை அடுத்து அவரது வீடு இருக்கும் போயஸ் கார்டனுக்கு அதிகமானோர் செல்ல தொடங்கி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

boise garden,cctv camera,rajini,politics,party ,போயஸ் கார்டன்,சிசிடிவி கேமரா,ரஜினி,அரசியல்,கட்சி

இதனை அடுத்து சென்னை போயஸ் கார்டன் பகுதி முழுவதும் தனது சொந்த செலவில் சிசிடிவி கேமராவை ரஜினி வைக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு பிறகு போயஸ் கார்டனுக்கு அதிகமான வருகை தருவதால் இந்த சிசிடிவி கேமரா பொருத்தப்பட இருப்பதாகவும் போயஸ் கார்டனுக்குள் யார் யார் வருகிறார்கள் என்பதை அறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சிசிடி கேமரா பயன்படும் என்றும் கூறப்படுகிறது.

Tags :
|