Advertisement

பேசிக் கொள்ளாத ரஜினி-தனுஷ்; கோலிவுட்டில் பரவும் பரபரப்பு செய்தி

By: Nagaraj Wed, 16 Dec 2020 10:06:32 AM

பேசிக் கொள்ளாத ரஜினி-தனுஷ்; கோலிவுட்டில் பரவும் பரபரப்பு செய்தி

கடந்த சில வருடங்களாக ரஜினியும், தனுஷும் பேசிக் கொள்வது இல்லையாம். அதனால்தான் இந்தாண்டு தனது மாமனாருக்கு சமூக வலைதளத்தில் தனுஷ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறவில்லையாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அதில் ஒருவர்தான் ஐஸ்வர்யா. நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு தான் சூப்பர் ஸ்டார் மருமகன் என்ற பட்டத்தோடு தனுஷின் மார்க்கெட் மெல்ல மெல்ல தமிழ் சினிமாவில் உயர ஆரம்பித்தது.

நடிகராக வெற்றிகண்ட தனுஷ் தயாரிப்பாளராகவும் பல படங்களில் வெற்றி மேல் வெற்றி கொடுத்து வந்தார். இன்று முன்னணியில் இருக்கும் சிவகார்த்திகேயனை வைத்து முதன்முதலில் படம் எடுத்தவர் தனுஷ் தான். இந்நிலையில் தனுஷ் பெரிய படத்தை தயாரிக்க ஆசைப்பட்டு தன்னுடைய மாமனாரை வைத்து காலா என்ற படத்தை தயாரித்தார்.

rajinikanth,dhanush,happy birthday,not talking ,ரஜினிகாந்த், தனுஷ், பிறந்த நாள் வாழ்த்து, பேசிக் கொள்வதில்லை

காலா படம் தனுஷ் காலையே வாரும் என அவரே நினைத்திருக்க மாட்டார். அந்த அளவுக்கு ரஜினியின் கேரியரில் ஒரு தோல்விப் படமாக அமைந்துவிட்டது. இந்நிலையில் காலா நஷ்டத்தை ஈடுகட்ட முடியாமல் கிட்டத்தட்ட 30 முதல் 35 கோடி கடனாளி ஆகி விட்டாராம் தனுஷ்.

இவ்வளவு சிரமத்தில் தத்தளித்த தனுஷ், எப்படியாவது தன்னுடைய மாமனார் தன்னை காப்பாற்றி விடுவார் என்ற பெரும் நம்பிக்கையில் இருந்தாராம். ஆனால் வட்டிக்கு பணம் கொடுத்து வட்டியை சரியாக வாங்குவது போல தனுஷுக்கு படவாய்ப்பு கொடுத்து விட்டு தன்னுடைய 100 கோடி சம்பளத்தை கறாராக பேசி வாங்கி விட்டாராம் ரஜினி.

இதனால் கடந்த இரண்டு வருடங்களாக காலா பட நஷ்டத்தை பற்றிய பேச்சு வார்த்தைகள் நடந்து வரும் நிலையில் தற்போது அந்த பிரச்சனை முற்றி விட்டதாம். ரஜினியிடம் பேச்சுவார்த்தை சரிவராத நிலையில் தன்னுடைய சம்பளத்தை மொத்தமாகச் கொடுத்து கடனை அடைத்து விட்டாராம் தனுஷ். கடந்த மூன்று வருடங்களாகவே தனுஷ் மற்றும் ரஜினி இருவரும் அவ்வளவாக பேசிக் கொள்வதில்லை என்பது போன்ற செய்திகள் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் உலா வருகின்றன.

இதனால்தான் இந்த வருடம் சமூக வலைத்தளத்தில் தனது மாமனார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்கிறார்கள்.

Tags :