Advertisement

மதத் துவேஷமும் கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்; ரஜினிகாந்த் டுவிட்

By: Monisha Wed, 22 July 2020 1:09:45 PM

மதத் துவேஷமும் கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்; ரஜினிகாந்த் டுவிட்

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோவுக்கு முருக பக்தர்கள், இந்து மத ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்ததை அடுத்து தமிழக அரசு அதிரடி அதிரடி நடவடிக்கை எடுத்து கருப்பர் கூட்டம் நிர்வாகிகளை கைது செய்தது. அது மட்டுமின்றி கருப்பர் கூட்டம் யூட்யூப்பில் இருந்து சுமார் 500 வீடியோக்கள் நீக்கப்பட்டன.

திரையுலகைச் சேர்ந்த பலரும் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்ட கருப்பர் கூட்டத்திற்கு கண்டனம் தெரிவித்த நிலையில் ரஜினியும் இதுகுறித்து கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் நேற்று பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

youtube channel,kandasashti,rajinikanth,tweet ,யூடியூப் சேனல்,கந்தசஷ்டி,ரஜினிகாந்த்,டுவிட்

இந்த நிலையில் சற்று முன்னர் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி, கொந்தளிக்கச் செய்த இந்த ஈனச்செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி, தவறு செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். இனிமேலாவது மதத் துவேஷமும் கடவுள் நிந்தனையும் ஒழியட்டும். ஒழியனும். எல்லா மதமும் சம்மதமே. கந்தனுக்கு அரோகரா!! என்று பதிவு செய்துள்ளார்.

Tags :