- வீடு›
- பொழுதுபோக்கு›
- முகமூடி அணிந்து சுற்றி வரும் ராஜ்குந்த்ரா... புகைப்படங்கள் வெளியானது
முகமூடி அணிந்து சுற்றி வரும் ராஜ்குந்த்ரா... புகைப்படங்கள் வெளியானது
By: Nagaraj Tue, 25 Oct 2022 3:34:54 PM
மும்பை: ஆபாசமாக படம் எடுத்த வழக்கில் ராஜ்குந்த்ராவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது ஜாமீனில் வெளியே வந்த அவர், யாருடைய கண்ணிலும் படாதவாறு முகமூடி அணிந்து சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா. அவர் ஒரு தொழிலதிபர் மற்றும் ஐ.பி.எல். ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளர்களில் ஒருவராகவும் இருந்தார். இந்நிலையில் ஆபாசமாக படம் எடுத்த வழக்கில் ராஜ்குந்த்ராவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்போது ஜாமீனில் வெளியே வந்த அவர், யாருடைய கண்ணிலும் படாதவாறு முகமூடி
அணிந்து சுற்றி வந்துள்ளார். கடந்த ஒரு வருடமாக வெளியுலகுக்கு தெரியாமல்
தலைமறைவாகி விட்டார்.
அவர் முகமூடி அணிந்து நடமாடுவதாக
கூறப்படுகிறது. இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில்
வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.