Advertisement

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக இணையும் ரியல் தம்பதி

By: Nagaraj Thu, 24 Sept 2020 9:05:33 PM

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக இணையும் ரியல் தம்பதி

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக இணைகின்றனர் யோகேஸ்வரன் - மைனா நந்தினி ஆகியோர் என்று தகவலகள் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் கதை கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மையப்படுத்தி அமைக்கப்பட்டு இருப்பதால் கிராமங்களிலும், நகரங்களிலும் இத்தொடருக்கு பார்வையாளர்கள் அதிகம்.

அதுமட்டுமின்றி கதிர் - முல்லை கதாபாத்திரங்களுக்கு இடையேயான காதல், தனம் அண்ணியின் பாசம், என இத்தொடரில் நடிக்கும் நடிகர்களுக்கும் தனித்தனியே ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சமீபத்தில் இத்தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்த ஹேமாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. எனவே அவர் மீண்டும் சீரியலுக்கு வர இன்னும் சில மாதங்களாகவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

yogeswaran,pandian stores,couple,fans ,யோகேஸ்வரன், பாண்டியன் ஸ்டோர்ஸ், தம்பதி, ரசிகர்கள்

அதேவேளையில் மீனா கேரக்டருக்கு வேறு எந்த நடிகையும் வேண்டாம். அவரே அந்தக் கேரக்டரில் மீண்டும் நடிக்க வேண்டும் என்று பார்வையாளர்கள் சமூகவலைதள பதிவுகளின் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே கடந்த செப்டம்பர் 21-ம் தேதி முதல் இத்தொடர் 1 மணி நேரம் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இத்தொடரில் கடைக்குட்டியாக இருக்கும் சரவணன் விக்ரமுக்கு ஜோடியாக சத்யசாய் கிருஷ்ணா இணைந்திருந்தார்.

அவரைத் தொடர்ந்து தற்போது யோகேஸ்வரன் - மைனா நந்தினி ஆகியோர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.

நிஜ வாழ்க்கையில் கணவன் - மனைவியாக இருக்கும் இத்தம்பதியை பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு வரவேற்று ரசிகர்கள் கமெண்ட் பதிவிட்டுள்ளார்கள். பாண்டின் ஸ்டோர்ஸ் கதைப்படி கதிர் - முல்லை இருவரும் சென்னை செல்வார்கள் என்று தெரிகிறது. அங்கு கதிரின் நண்பராக யோகேஸ்வரன் இருப்பார் என்றும் தெரிய வருகிறது.

Tags :
|