- வீடு›
- பொழுதுபோக்கு›
- ஆர்ஆர்ஆர் படத்தின் 2ம் பாகம் எடுக்க திட்டம்: ராஜமௌலியின் தந்தை தகவல்
ஆர்ஆர்ஆர் படத்தின் 2ம் பாகம் எடுக்க திட்டம்: ராஜமௌலியின் தந்தை தகவல்
By: Nagaraj Tue, 11 July 2023 8:14:38 PM
ஐதராபாத்: ‘ஆர்.ஆர்.ஆர். இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிடப்பட்டு வருவதாக படத்தின் திரைக்கதை ஆசிரியரான ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.
ராஜமௌலி இயக்கத்தில், ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான ஆர்ஆர்ஆர். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு… நாட்டு…’ பாடல் ‘ஆஸ்கர்’ விருதையும், கோல்டன் குளோப் விருதையும் பெற்று உலக கவனத்தைப் பெற்றது.
ஆர்.ஆர்.ஆர். படத்தின் 2ம் பாகம் வருமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. இந்நிலையில் ‘ஆர்.ஆர்.ஆர். இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிடப்பட்டு வருவதாக படத்தின் திரைக்கதை ஆசிரியரான ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘ஆர்.ஆர்.ஆர். இப்படத்தின் 2ம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர். ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். படத்தின் 2ம் பாகத்திலும் நடிக்கவுள்ளனர். இந்தப் படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும். முன்னணி ஹாலிவுட் பட நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ராஜமௌலியோ அல்லது வேறு யாரோ அவருடைய மேற்பார்வையில் இயக்கலாம்” என்றார்.
‘ஆர்ஆர்ஆர்’ 2ம் பாகம் குறித்த தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்தையும் ராஜமௌலியே இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.