- வீடு›
- பொழுதுபோக்கு›
- கியாரா அத்வானி கர்ப்பமான பின்பே திருமணம் செய்து கொண்டதாக பரவும் தகவல்
கியாரா அத்வானி கர்ப்பமான பின்பே திருமணம் செய்து கொண்டதாக பரவும் தகவல்
By: Nagaraj Mon, 13 Feb 2023 09:06:52 AM
மும்பை: கியாரா அத்வானி கர்ப்பமான பின்னே திருமணம் செய்துக் கொண்டதாக கே.ஆர்.கே. தெரிவித்துள்ளார். இத்தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
பாலிவுட் நடிகை கியாரா, நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா இருவரும் காதலித்து வந்தார்கள். இருவரும், ஜெய்சால்மரில் உள்ள சூர்யாகர் அரண்மனையில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
விக்கி கௌஷல்-கத்ரீனா கைஃப், ரன்பீர்-ஆலியா மற்றும் கே.எல்.ராகுல்-அத்தியா ஷெட்டி உள்பட பல நட்சத்திர ஜோடி இத்திருமணத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் கியாரா அத்வானி கர்ப்பமானதால் தான் அவசர, அவசரமாக திருமணம் நடந்திருக்கிறது என செய்தி பரவியது.
தொடர்ந்து, பாலிவுட்டின் விமர்சகர் கமால் ஆர். கான் எனப்படும் கே.ஆர்.கே. ட்விட்டரில், முதலில் கர்ப்பமாகிவிட்டு அதன் பிறகு திருமணம் செய்து கொள்வது தான் பாலிவுட்டின் புது டிரெண்ட் ஆகும்.
பாலிவுட்டில் அண்மையில் நடந்த திருமணமும் கூட இதே ஃபார்முலாவை தான் பின்பற்றியிருக்கிறார்களாம். நல்லது என தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.