Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • போலீஸ் துறையில் இதுபோன்ற சாத்தான்களா?...சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக எஸ்ஏ சந்திரசேகர் கருத்து

போலீஸ் துறையில் இதுபோன்ற சாத்தான்களா?...சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக எஸ்ஏ சந்திரசேகர் கருத்து

By: Monisha Thu, 02 July 2020 11:00:14 AM

போலீஸ் துறையில் இதுபோன்ற சாத்தான்களா?...சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக எஸ்ஏ சந்திரசேகர் கருத்து

சாத்தான்குளம் தந்தை - மகன் லாக்அப் மரணம் தொடர்பாக தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் போலீஸார் தந்தை, மகனை அழைத்துச் சென்று தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் லாக்அப்பில் உயிரிழந்திருக்கும் சம்பவத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளன. தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள், பாலிவுட் பிரபலங்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள் என பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

police,sathankulam,lockup death,sa chandrasekhar ,போலீஸ்,சாத்தான்குளம்,லாக்அப் மரணம்,எஸ்ஏ சந்திரசேகர்

இந்தநிலையில் தற்போது தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

இந்த கொரோனா என்ற கொடிய வைரஸ் இடமிருந்து கூட தப்பித்து உயிரோடு திரும்பி விடலாம். ஆனால் சாத்தான்குளம் போலீஸ் அதிகாரிகளிடம் சிக்கினால் கண்டிப்பாக உயிரோடு திரும்ப முடியாது, இந்த கொரோனா காலத்தில் எத்தனை போலீஸ் அதிகாரிகள் கடவுளுடைய பிரதிநிதிகளாக கருதப்படுகிறார்கள். அதை மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது. அப்படிப்பட்ட போலீஸ் துறையில் இதுபோன்ற சாத்தான்களா? இவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த சாத்தான்களை காப்பாற்ற நினைக்கும் யாரையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Tags :
|