- வீடு›
- பொழுதுபோக்கு›
- போராளி பெண் கதாபாத்திரத்தில் நடிக்க ரூ.2 கோடி சம்பளம் கேட்ட சாய்பல்லவி
போராளி பெண் கதாபாத்திரத்தில் நடிக்க ரூ.2 கோடி சம்பளம் கேட்ட சாய்பல்லவி
By: Monisha Sat, 26 Dec 2020 09:46:43 AM
பவன் கல்யாண் மனைவியாக நடிக்கும் போராளி பெண் கதாபாத்திரத்தில் நடிக்க சாய்பல்லவி ரூ.2 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை சாய்பல்லவி மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் அறிமுகமானார். இந்த படம் வெற்றி பெற்றதால் இதர மொழி படங்களில் அவருக்கு வாய்ப்புகள் வந்தது. இதைத்தொடர்ந்து தமிழில் தியா, மாரி-2, என்.ஜி.கே, படங்களில் வந்தார்.
தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். மலையாளத்தில் பிருதிவிராஜ், பிஜுமேனன் இணைந்து நடித்து வெற்றி பெற்ற அய்யப்பனும் கோஷியும் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் பிஜுமேனன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண், பிருதிவிராஜ் வேடத்தில் ராணா ஆகியோர் நடிக்கின்றனர்.
சாகர் கே.சந்திரா இயக்குகிறார். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் உள்ளனர். இதில் பவன் கல்யாண் மனைவியாக நடிக்கும் போராளி பெண் கதாபாத்திரத்தில் நடிக்க சாய்பல்லவியை படக்குழுவினர் அணுகினர். அவர் ரூ.2 கோடி சம்பளம் கேட்டதாக தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது. கேட்ட சம்பளத்தை கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்வதா? அல்லது வேறு கதாநாயகியை தேர்வு செய்வதா? என்று படக்குழுவினர் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. இன்னொரு நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.