- வீடு›
- பொழுதுபோக்கு›
- புதிய படத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணாக நடிக்கும் சமந்தா!
புதிய படத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணாக நடிக்கும் சமந்தா!
By: Monisha Thu, 17 Sept 2020 10:07:09 AM
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. இவர் சூப்பர் டீலக்ஸ், யூ டர்ன், தெலுங்கில் ரங்கஸ்தலம் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். இதனைஅடுத்து தற்போது புதிய படமொன்றில் மாற்றுத்திறனாளியாக நடிக்க சமந்தா சம்மதம் தெரிவித்து உள்ளார்.
இந்த படத்தை கேம் ஓவர் படத்தை இயக்கி பிரபலமான அஸ்வின் சரவணன் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது. இந்த படத்தில் வாய்பேசாத, காது கேட்காத பெண்ணாக சமந்தா நடிக்கிறார். இதற்காக பயிற்சிகள் எடுத்து வருகிறார். இது திகில் படமாக தயாராகி வருகிறது.
இதுகுறித்து சமந்தா கூறுகையில், "வாழ்க்கையில் புதிய புதிய சவால்களை ஏற்றால்தான் நமக்குள்ளே இருக்கும் திறமை வெளியே வரும். இது எல்லா துறைகளுக்கும் பொருந்தும்.
நடிகையாக எனக்கு இப்போது எந்த பயமும் இல்லை. எவ்வளவு கஷ்டமான கதாபாத்திரம் என்றாலும் செய்ய முடியும் என்று நம்புகிறேன். அடுத்து மாற்றுத்திறனாளி பெண்ணாக நடிக்கிறேன். ஏற்கனவே மகாநதி படத்தில் திக்குவாய் பெண்ணாக நடித்தேன். அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ததாக எனக்கு பெயர் வந்தது" இவ்வாறு அவர் கூறினார்.