- வீடு›
- பொழுதுபோக்கு›
- பிக்பாஸ் வீட்டில் நீதிமன்ற டாஸ்க்கில் தீர்ப்பை ஏற்காத ஷிவின் போராட்டம்
பிக்பாஸ் வீட்டில் நீதிமன்ற டாஸ்க்கில் தீர்ப்பை ஏற்காத ஷிவின் போராட்டம்
By: Nagaraj Wed, 23 Nov 2022 6:33:43 PM
சென்னை: பிக்பாஸ் வீட்டில் நீதிமன்ற டாஸ்க்கில் தீர்ப்பை ஏற்காத ஷிவின் போராட்டம் நடத்தினார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிக்பாஸில் இருந்து வாரத்திற்கு ஒரு போட்டியாளர் வீதம் கடந்த ஐந்து வாரங்களில் 5 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆறாவது வாரத்துக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. ஏடிகே நீதிபதியாகவும், அசீம், ஆயிஷா மற்றும் ஷிவின் வழக்கறிஞர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நேற்று அம்பாக ஜனனி, வில்லாக அமுதவாணன் என்று கூறிய விக்ரமன்
மீதான வழக்குதான் முதல் வழக்கு. இதில் அமுதவாணன், ஜனனி தரப்பு வெற்றி
பெற்றுள்ளது. இந்த தீர்ப்பை ஏற்காத ஷிவின் கோர்ட்டில் போராட்டம்
நடத்தினார்.
இதையடுத்து, கோர்ட்டில் இருந்து வெளியே வந்த ஜனனி,
ஷிவினிடம் சென்று, “நீ சொன்னது தவறு, நீதிபதியின் தீர்ப்பை ஏன்
ஏற்கவில்லை?” என, கேள்வி எழுப்பியுள்ளார். இது தீர்ப்பு இல்லை என,
ஷிவினும், தனலெட்சுமியும் வாதிட்டனர்.